விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். உபாகமம் 28:7

இந்த படத்தில் படத்தில் பார்ப்பது போல கிறிஸ்தவர்கள் பூனைகள் போல இருந்தாலும் நம்மை காக்க இயேசு என்ற யூதா கோத்திரத்துச் சிங்கம் ஒருவர் இருக்கிறார். அவர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து நம்மை தேவனுக்கென்று அவருடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்;  நாம் பூமியிலே அரசாளும் நாட்கள் மிக விரைவில் வருகின்றது. அந்நாளில் நமக்கு எதிராய் ஒரு வழியாய் புறப்பட்டு வந்தவர்கள்; ஏழு வழியாய் நமக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

எந்தப் பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போவது இல்லை
எந்தப் பக்கம் தள்ளப்பட்டும் தளர்ந்து போவது இல்லை
கிறிஸ்துவின் அன்பில் இருந்து பிரிப்பவர் யாருண்டு
பிரிக்க முடியாது நம்மை பிரிக்க முடியாது

கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை
★☆★ Like Tag Share ☆★☆

0 Response to " "

Post a Comment