விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஆத்துமாவை நிரப்பிடும் கர்த்தர் (16 June 2014)



நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். எரேமியா 31 : 25

தேவன் தம்முடைய ஜனங்களுக்கு அருளும் மாபெரும் ஆசீர்வாதம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள். தம் ஜனங்களை பாவ சாபங்களிலிருந்து மீட்டு, நோய்களை குணமாக்கி, காயங்களை ஆற்றுவது மட்டுமல்லாமல் ஆவிக்குரிய நன்மைகளால் நிரப்புகிறார். அவர் அப்படியே விட்டுவிடாமல் “அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்கு பயப்படும்படிக்கும் நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும், ஒரே வழியையும் கட்டளையிட்டு” தேவன் தம் ஜனங்களுக்கு புதிய இருதயத்தை தந்து வேதத்தை தந்து அனுதினமும் ஆத்துமாவை போஷிக்கிறார். மட்டுமன்றி தம்முடைய பரிசுத்த ஆவியால் நம்மையும், நம் பிள்ளைகளையும் நிரப்புகிறார்.

நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். யோவேல் 2 : 28 கடைசி நாட்களில் தேவஜனங்களுக்காக தேவன் வைத்திருக்கும் உன்னதமான ஆசீர்வாதங்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் தேவனோடு உறவாடும் உன்னதமான அனுபவங்களை நாம் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஏனெனில் நாம் அவருடைய ஜனங்களாயிருக்கிறோம். அவர் நம்முடைய தேவனாக இருக்கிறார். இந்த நாட்களில் நாமும் வாஞ்சையுடன் ஆவிக்குரிய அனுபவங்களுக்காக ஜெபிப்போம். தேவன் நமக்கு கொடுக்கும் உன்னதமான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம். சபைகளில் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி ஊற்றப்படுவதாக. பரிசுத்த ஆவியானவரின் உன்னத பெலனுடன் சாட்சிகளாய் ஜீவிக்க ஆத்தும ஆதாயம் செய்து அவர் வருகைக்கு ஆயத்தமாவோம்.

ஜெபம்: நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் என்று வாக்குறைத்த படியே என்னை அனுதினமும் உம்முடைய கிருபையால் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்து போன என் ஆத்துமாவை தேற்றி வழி நடத்தி வருகின்ற தயவுக்காக நன்றி இயேசுவே. எனது வாழ்வின் மறைவான பாவங்களுக்கு என்னை விலக்கி, உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் நிறைவைக் காணச்செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " ஆத்துமாவை நிரப்பிடும் கர்த்தர் (16 June 2014) "

Post a Comment