விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


இனிமையான இயேசு நாமம்

அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் யோவானும் தேவனை ஆராதித்து ஜெபிக்க ஜெருசலேமில் உள்ள தேவாலயத்திற்கு செல்கின்றனர். ஆலயத்தின் வாசலருகே, தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷன், பேதுருவையும் யோவானையும் கண்டு இவர்களிடத்தில் தனக்கு கொஞ்சம் காசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து தன் கையை நீட்டினான். பிறப்பிலே முடவனாய் ஒரு பிறந்த மனிதனின் கால்கள் சூம்பிப்போய் இருக்கும். எந்த மருந்து மாத்திரையும், அறுவை சிகிச்சையினாலும் சுகப்படுத்த முடியாத்தாக காணப்படும்.

பேதுருவிடமோ அல்லது யோவானிடமோ சுத்தமாக காசு இல்லை. அவர்களும் ஏழைகள் தானே. முதலாவது அவர்கள் மீனவர்களாக இருந்தார்கள். பின்பு அவர்கள் தமக்கு இருந்த எல்லவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றினர்.  இந்நிலையில் பிச்சை கேட்பனிடம் காசு இல்லை என்றுமாத்திரம் அவர்கள் சொல்லியிருந்தால், அந்த சப்பாணியாய்ப் பிறந்த மனுஷன் அவர்களுக்கும் ஒரு தட்டு கொடுத்து தன்னோடு சேர்ந்து  பிச்சை எடுக்க சொன்ன்னாலும் சொல்லிருப்பான்.

ஆனால் அவர்களிடம் உயரிய, மதிபிற்க்கடங்காத சொத்தாகிய இயேசுவின் நாமும், அவரைபற்றும் விசுவாசமும் இருந்த்து. ஆதலால் பேதுரு அவனை பார்த்து விசுவாசத்தோடு சொன்னார், வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான். பேதுரு இயேசுவின் நாமத்தில் இருந்த வல்லமையை விசுவாசித்தவராக அவனை தூக்கி விடுவதை பார்க்கின்றோம். உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். கிறிஸ்து பிறப்பதற்கு 800 வருடங்களுக்கு முன்பதாக வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட "முடவன் மானைப்போல் குதிப்பான் (ஏசாயா 35:6)" - என்ற தீர்க்கதரிசனம் இங்கே நிறைவேறுவதை பார்க்கின்றோம்.

சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷன் இப்போது குதித்து தேவனை மகிமைப் படுத்துவதை பார்க்க ஒரு கூட்ட மக்கள் கூடி விட்டனர். அவர்களை பார்த்து பேதுரு இப்படியாக சொன்னார் "இயேசுவினுடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது;" அப்போஸ்தலர் 3:16

இயேசுவின் நாமத்தினால் சரீரத்தின் வியாதிகள் சுகமாவது மட்டுமல்ல, இரட்சிப்பும் கிடைக்கின்றது.  இயேசுவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை அப்போஸ்தலர் 4:6

ஆம் பிரியமானவர்களே, பிறவி முடவனை பெலப்படுத்தி நடக்கசெயத்த இயேசுவின் நாம்ம் இன்றைக்கும் வல்லமை குறையாத்தாக காணப்படுகின்றது. ஆதலால் தான் இயேசுவின் நாமத்தை உயர்த்தும் "Duniya ke kone kone mein , goonj raha Yeshu ka naam" - என்ற பழைய ஹிந்தி பாடலை தமிழில் மொழி பெயர்த்து "இந்தியாவின் மூலை மூலையில் பரவிடனும் இயேசு நாமம்" என்று வெளியிட்டுள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள link-ல் இந்த பாடல் உள்ளது.

இனிமையான இயேசுவின் நாமத்தை பறப்புவோம். தேசத்தை சுதந்தரிப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை
★☆★ Like Tag Share ☆★☆

0 Response to " "

Post a Comment