விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்



இனி காலம் செல்லாது. வெளி 10:6
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆

வருகிற 2032 ஆம் ஆண்டில் பூமியை ஒரு ராட்ஷச விண்கல் தாக்குமென்றும், இதனால் உலகம் அழியும் ஆபத்து உள்ளதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் அனுமிங்கும் மிதக்கும் விண்கற்களில் சில பூமியை நோக்கி பயணிக்கின்றன. இத்தகைய விண்கற்களில் பெரும்பாலானவை பூமியை நெருங்குவதற்கு முன்பே வெடித்துவிட, சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்த விண்கல்லால் பாதிப்பும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் இன்னும் 19 ஆண்டுகளில் அதாவது 2032 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி மற்றொரு ராட்ஷச விண்கல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாகவும், 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கினால் உலகம் முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளதாகவும் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வேளை இந்த விண்கல் பூமியை தாக்கினால் மிகவும் சக்திவாய்ந்த அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்பை விட இது 50 மடங்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துமாம். “2013 டி.வி 135” என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் குறித்த தகவல்களை இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாட்டு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது நாம் கடைசி காலத்தில், கடைசி மணி நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் மிகையாகாது. இனி காலம் செல்லாது என்று சொல்லுகின்ற கால கட்டத்துக்குள்ளே நாம் வந்து விட்டோம். நமதாண்டவர் தம்முடைய மகிமையான வருகைக்கு முன்பாக உலகில் நடைபெறும் என்று சொன்ன அடையாளங்க்ள அனைத்தும் வெகு வேகமாக நமது கண்களுக்கு முன்பாக நிறைவேறி கொண்டு வருகின்றன. ஆம், இயேசுகிறிஸ்து மத்திய ஆகாயத்தில் வெளிப்படும் நாள் வெகு விரைவில் வரப்போகிறது.

அன்று நோவா கர்த்தருக்கு முன்பாக நீதிமானாக காணப்பட்டதினிமித்தம் அவரும், அவருடைய குடும்பமும் அழிவிலிருந்து காக்கப்பட்டார்கள். இனி வரப்போகும் அழிவிலிருந்து நாமும் காக்கப்பட வேண்டுமானால், நாம் நீதிமான்களாக காணப்படுவது மிகவும் முக்கியம். கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படுபவர்கள் நீதிமான்களாவார்கள். நீதிமான் என்று சொல்லி, மீண்டும் நம் இஷ்டம் போல் நம் வாழ்க்கையை நடத்துவோமானால், நாம் நிச்சயம் கைவிடப்பட்டு போவோம். ஆகவே நமது சுபாவங்களையும், செயல்களையும் தேவ தயவோடு மாற்ற பிரயாசமெடுத்து எப்போதும் அவரது வருகைக்கு ஆயத்தமாயிருப்போம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்! மாரநாதா! ஆமென் அல்லேலூயா!

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment