விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கிறிஸ்துவைப் போன்று மன்னித்தல் (06 June 2014)



"போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய (கிறிஸ்துவினுடைய) விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது." யோவான் 19:34.

இந்த வேதவாக்கியம், மன்னித்தல் பற்றியதான ஆழமான ஆவிக்குரிய சத்தியங்கள் நிறைந்த ஒன்றாகும். போர்ச்சேவகன் நம் கர்த்தரை அவருடைய விலாவிலே உருவக்குத்தினபோது, உண்மையில் அது அவருடைய இருதயத்திற்குள் ஊடுருவி பாய்ந்தது! உடனே அவருடைய இருதயத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. அந்த ரோமப் போர்ச்சேவகன் கிறிஸ்துவின் இருதயத்தை உருவக்குத்தினதுபோல, சில வேளைகளில் சிலர் நம்முடைய இருதயத்தை உருவக்குத்தக்கூடும் - ஈட்டிகளினால் அல்ல, தங்கள் நாவினாலே! அவர்கள் நம்மைப் புறக்கணித்து, அசட்டை பண்ணி, பரியாசம் செய்து, அல்லது நம்மைக் குறித்து எல்லாவிதமான தீமையான மொழிகளையும் பொய்யாகப் பேசக்கூடும். ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், இவை எல்லாவற்றிற்கும் நம்முடைய பிரதிக்கிரியை எவ்வாறிருக்கிறது என்பதே.

நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இருதயம் குத்தப்பட்டபோது உண்டான பிரதிக்கிரியை என்னவாயிருந்தது? "உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது." கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் 'மன்னிப்பைக்' குறிக்கிறது. "இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது"(எபேசியர்.1:7). நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்முடைய இருதயத்தை உருவக்குத்தும்போது, நம்முடைய இருதயத்திலிருந்து அவர்களுக்கு 'மன்னிப்பு' புறப்பட்டு வர வேண்டும். தண்ணீர் அநேக காரியங்களைக் குறிக்கிறது. அவைகளில் ஒன்று 'தெய்வீக அன்பு' ஆகும். பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்படும் தேவ அன்பை 'ஜீவத் தண்ணீர்கள்' என்று கர்த்தராகிய இயேசு குறிப்பிட்டிருக்கிறார். (யோவான் 7:38,39; ரோமர் 5:5). நாம் 'உருவக்குத்தப்படும்'போது, நம்மை அவ்விதம் குத்துகிறவர்களுக்கு மன்னிப்பையும், தெய்வீக அன்பையும் வழங்க வேண்டும்.

சிலர் தங்களுக்கு விரோதமாகக் குற்றம் செய்தவர்களைச் சில வருடங்களுக்குப் பின்னர் மன்னிக்கப் பிரயாசப்படுகிறார்கள். ஆனால் "உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது" என்றே திருவசனம் சொல்லுகிறது. நாம் உடனடியாக மன்னித்து, நேரடியாக நிபந்தனையற்ற தெய்வீக அன்பை (agape) வழங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். போர்ச்சேவகன் கிறிஸ்துவை உருவக்குத்தியபோது இரத்தமும் தண்ணீரும் எங்கிருந்து புறப்பட்டது வந்தது? அவருடைய இருதயத்திலிருந்து! 'நான் உன்னை மன்னிக்கிறேன், உன்னை நேசிக்கிறேன்' என்று சில வேளைகளில் நாம் நம்முடைய வாயினாலே சொல்லலாம். ஆனால் மன்னித்தலும் அன்பும் நம்முடைய இருதயத்திலிருந்து புறப்பட்டது வர வேண்டும். இதுவே எல்லா வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறது; இதுவே கிறிஸ்துவைப் போன்று மன்னித்தலகும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " கிறிஸ்துவைப் போன்று மன்னித்தல் (06 June 2014) "

Post a Comment