விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

அரசர். யோசியா – பாகம் 3


யோசியா பரிசுத்தமான பஸ்காவை அனுசரிதல்

யோசியா ராஜா முதலாவது தேசத்தை சுத்திகரிதார். இரண்டாவது தேசத்தின் ஜனங்களை சுத்திகரித்தார். மூன்றாவதாக தனது 26-ம் வயதிலே, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் விடுவிக்கப்பட்டதை நினைவுகூறும் பஸ்கா பண்டிகையை அனுசரித்தார். பஸ்கா பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும்யூத காலண்டரில் முதல் மாதமாகிய நிசான் மாதம் 14-ம் தேதி கொண்டாடப்பட்டது. நிசான் மாதம் இன்றைய காலண்டரில் மார்ச் மத்தியிலும் மற்றும் ஏப்ரல் மாதத்திலும் வருகிறது. அந்த பண்டிகை ஒரு வாரத்துக்கு நீடிக்கும். அந்த நாட்களில் எல்லாம் யூதர்கள் புளிப்பில்லா அப்பம் மட்டுமே சாப்பிட வேண்டும். எனவே, பஸ்கா பண்டிகையானது 'புளிப்பில்லா அப்பப் பண்டிகை' என்றும் பெயர் பெற்றது. பண்டிகையின் முதல் நாளன்று பஸ்கா விருந்து புசிக்கப்படும், பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்படும். (லேவியராகமம்: 23:4-8; உபாகமம்: 16:1-8).

யூதர்கள் எகிப்திலிருந்த அந்த கடைசிநாள் இரவு அன்று, தேவன் எகிப்தியரின் தலையீற்றுகள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்தார். காரணம், எகிப்தின் ராஜாவான பார்வோன் யூதர்களை விடுதலை செய்ய சம்மதிக்கவில்லை. அதற்கு முன், தேவன் யூதர்களை ஒரு ஆட்டுக் குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை அவர்களது வீடுகளின் நிலைக்கால்களில் பூசச் சொன்னார். சங்காரத்தூதன் வந்து, அந்த நிலைக்கால்களில் பூசப்பட்டிருக்கும் இரத்தத்தைக் காணும்போது, அந்த வீடுகளில்உள்ள தலையீற்றுக்களை அழிக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்வான். (யாத்திராகமம்: 12:1-14,21-30; எபிரேயர்: 11:28). 'பஸ்கா' என்றால் கடந்து செல்வது என்று பொருள். இதை ஆங்கிலத்தில் “PASSOVER” என்று சொல்வார்கள்.

இந்த பண்டிகயானது தலைமுறை தலைமுறையாக, நித்ய நித்தியமாக நினைவு கூற வேண்டும் என்று கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டிருந்த பொழுதும், இஸ்ரவேல் ஜனங்கள் கிட்டத்தட்ட 400 வருடங்களாக இந்த பண்டிகையை சரியான வகையில், பரிசுத்தமான முறையில் அனுசரிக்காமல் இருந்தனர். இதைக்கண்ட யோசியா, ஆசாரியர், லேவியர் என எல்லோரையும் பரிசுத்ததோடு பஸ்க்காவை அனுசரிக்கும் செய்தார். தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை. (II நாளாகமம் 35:6,18).

சாமுவேல் நாட்கள் முதல் தாவீது உட்பட அநேக ராஜாக்கள் பஸ்காவை கொண்டாடியிருந்தாலும் மக்களை பரிசுத்தபடுத்தி எந்த அரசனும் பஸ்காவை அனுசரிக்கதினால், யோசியா அரசன் அனுசரித்த பரிசுத்த பஸ்கா கர்த்தரின் பார்வையில் விலையேறபெற்றதாக இருந்தது.

பஸ்கா தினத்தில் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியைப் போலவே, கிறிஸ்துவும் ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டியாய் இருக்கிறார். (1கொரிந்தியர்: 5:7). ஏசாயா: 53:7 - "...அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகின்ற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்திரிக்கிறவனுக்கு முன்பாக சத்திமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் , அவர் தம்முடைய வாயைத்திறவாதிருந்தார்."  வெளிப்படுத்தல்: 13:8 - "உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி..."  கிறிஸ்துவின் இரத்தத்தினாலே (அவரது சிலுவை மரணத்தினாலே) நாம் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனக் கட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். வெளிப்படுத்தல்: 7:14 - "...இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்".

எனவே, யூதர்களின் பஸ்கா பண்டிகையை அதாவது புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நாம் ஆசரியாமல், அதற்குப் பதிலாக, இயேசுவின் 'மரணம்' மற்றும் 'உயிர்த்தெழுதலை' ஆசரிக்கின்றோம். அவருடைய மரணம் 'பெரிய வெள்ளி' என்ற பெயரிலும், அவருடைய உயிர்த்தெழுதல் 'ஈஸ்டர்' என்ற பெயரிலும் நாம் ஆசரிகின்றோம். நாம் பரிசுத்தமாய் வாழ்ந்து அது போன்ற பணிடிகைகளை நினைவு கூற வேண்டுமென்பதே கர்த்தருடைய விருப்பமாய் இருகின்றது. எனவே பரிசுத்தத்தை காப்போம் பரலோகம் சேர்வோம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " அரசர். யோசியா – பாகம் 3 "

Post a Comment